பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ | ‛கோட்' படத்தில் மூன்று விஜய் - சஸ்பென்சை உடைப்பாரா வெங்கட் பிரபு? | தள்ளிப்போகும் ராயன்? | காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் அறிவிப்பு எப்போது? | 41 வயதில் எனக்கு ஏடிஎச்டி குறைபாடு : பஹத் பாசில் | எனக்கு 'தேவா' என பெயர் வைத்தது ராமராஜன் - இசையமைப்பாளர் தேவா | திருமண வதந்தியால் எனது உண்மையான காதலைகூட பெற்றோர் நம்ப மாட்டார்கள்: அஞ்சலி | 'ஜோரா கைய தட்டுங்க' : யோகி பாபு நடிக்கும் காமெடி படம் | ஒசாகா திரைப்பட விருதுகள் அறிவிப்பு : பொன்னியின் செல்வனுக்கு 7, விக்ரமிற்கு 8 |
1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன் பிறகு மகாநதி, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், இந்தியன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், 2002ம் ஆண்டில் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். என்றாலும் ஓராண்டுக்குள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்தார். அதன்பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தவர், கடைசியாக 2019ம் ஆண்டில் திருமணம் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் சுகன்யா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியின்போது, மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. இப்போது 50 வயதாகிறது. இனிமேல் நான் கல்யாணம், குழந்தை என்று இறங்கினால், பிறக்கப் போகும் குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா? இல்லை பாட்டி என்று அழைக்குமா என்று நானே யோசித்துப் பார்க்கிறேன். என்றாலும் மறுமணம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை, வேண்டும் என்றும் சொல்லவில்லை'' என்று அந்த கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கொடுத்துள்ளார் சுகன்யா.