ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன் பிறகு மகாநதி, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், இந்தியன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், 2002ம் ஆண்டில் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். என்றாலும் ஓராண்டுக்குள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்தார். அதன்பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தவர், கடைசியாக 2019ம் ஆண்டில் திருமணம் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் சுகன்யா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியின்போது, மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. இப்போது 50 வயதாகிறது. இனிமேல் நான் கல்யாணம், குழந்தை என்று இறங்கினால், பிறக்கப் போகும் குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா? இல்லை பாட்டி என்று அழைக்குமா என்று நானே யோசித்துப் பார்க்கிறேன். என்றாலும் மறுமணம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை, வேண்டும் என்றும் சொல்லவில்லை'' என்று அந்த கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கொடுத்துள்ளார் சுகன்யா.