தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

அமைச்சரும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. ‛வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பின் ‛காளி' படத்தை இயக்கினார். கடந்தாண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயம் ரவியை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது இறைவன், சைரன் படங்களை முடித்துவிட்டு சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை முடித்ததும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.