தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

அமைச்சரும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. ‛வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பின் ‛காளி' படத்தை இயக்கினார். கடந்தாண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயம் ரவியை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது இறைவன், சைரன் படங்களை முடித்துவிட்டு சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை முடித்ததும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.




