பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மாமன்னன்'. இந்த படத்தின் 50வது தின கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. இதில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் பேசிய இப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛இந்த படத்தின் கதை 30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த ஆதங்கம். இசையால் என்னால் அதை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதனால் படமாக செய்ய முடிந்தவருடன் இணைந்து பணியாற்றினேன். இந்த படம் இவ்வளவும் தூரம் வந்ததற்கான முக்கிய காரணம் வடிவேலு தான். படத்தில் உதயநிதிக்கு பின்னால் பைக்கில் வடிவேலு செல்லும் காட்சி என்னை மிகவும் பாதித்தது. அதனால் முழுமையாக இந்த கதையை எடுத்து செய்தேன்'' என்றார்.