லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் ' ஜெயிலர்'. அனிரூத் இசையில் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் என மூன்று மொழி ஸ்டார்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நெல்சன் ஒரு பேட்டியில், "தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணா சாரை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதில் ஒரு பவர்புல் போலீஸ் கதாபாத்திரம் இருந்தது. அதில் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அந்த கதாபாத்திரத்தை சரியாக வடிவமைக்க முடியவில்லை. அதனால் பாலகிருஷ்ணா உடன் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.