டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் ' ஜெயிலர்'. அனிரூத் இசையில் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் என மூன்று மொழி ஸ்டார்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நெல்சன் ஒரு பேட்டியில், "தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணா சாரை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதில் ஒரு பவர்புல் போலீஸ் கதாபாத்திரம் இருந்தது. அதில் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அந்த கதாபாத்திரத்தை சரியாக வடிவமைக்க முடியவில்லை. அதனால் பாலகிருஷ்ணா உடன் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.




