எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஆக.,10) தியேட்டரில் வெளியாகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.,9) காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ''4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்கிறேன். ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்'' எனத் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ள ரஜினி, அங்கிருந்து தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை பயணிக்கிறார். ஒருவாரத்திற்கு மேல் அங்கு இருக்கும் ரஜினி அதன் பின்னர் தான் சென்னை திரும்ப உள்ளார்.