‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஆக.,10) தியேட்டரில் வெளியாகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.,9) காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ''4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்கிறேன். ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்'' எனத் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ள ரஜினி, அங்கிருந்து தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை பயணிக்கிறார். ஒருவாரத்திற்கு மேல் அங்கு இருக்கும் ரஜினி அதன் பின்னர் தான் சென்னை திரும்ப உள்ளார்.