டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ஹிப் ஹாப் ஆதியின் உதவி இயக்குனர் மற்றும் நடிகர் ஆனந்த் இயக்கி உள்ள படம் ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இந்த படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார் என சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தனர் . இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடல் குறித்து கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி, இப்பாடலுக்கு 'அழாதே' எனும் பெயரிட்டுள்ளனர். இது ஒரு முதல் காதல் பாடல் என்கிறார்கள். இப்பாடலை தனுஷூடன் இணைந்து விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம் விஷால் பாடியுள்ளார். இந்த பாடலை ஆர். ஜே. விஜய் எழுதியுள்ளார். இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் ஆன இப்படம் இந்த வருடத்தில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த பாடலை வெளியிட உள்ளனர்.