பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழில் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'வினோதய சித்தம்' படம் தெலுங்கில் 'ப்ரோ' என்ற பெயரில் ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளியானது. 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வரும் இப்படத்தில் ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சரான அம்பாட்டி ராம்பாபு என்பவரை கிண்டலடிக்கும் விதத்தில் ஷியாம் பாபு என்ற ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
தமிழில் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி தெலுங்கு 'ப்ரோ' படத்தை இயக்கியிருந்தாலும் திரைக்கதை, வசனத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் எழுதியிருந்தார். சினிமா, அரசியல் என இருக்கும் பவன் கல்யாண் படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் சில அரசியல் வசனங்களையும் த்ரிவிக்ரம் எழுதியிருந்தார்.
அம்பாட்டி ராம்பாபுவை சித்தரிப்பதாகச் சொல்லப்படும் ஷியாம் பாபு கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான பிருத்வி நடித்திருந்தார். இவர் தமிழில் 'பாரிஜ் ஜெயராஜ், பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆந்திர ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சேர்ந்தவர்.
'ப்ரோ' படம் குறித்து அமைச்சர் அம்பாட்டி ராம்பாபு, “அவர்களுக்குத் தைரியும் இருந்தால் நேரடியாக அரசியல் படங்களை எடுக்கட்டும். ஏன் மறைமுகமாகத் தாக்க வேண்டும். ராம்பாபு என நேரடியாக எனது பெயரை வைக்க வேண்டியதுதானே. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீண்டும் இது போல செய்தால் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 'ப்ரோ' படத்திற்கான பணத்தை சட்ட விரோதமான அதன் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் பெற்றுள்ளதாக அமைச்சர் ராம்பாபு குற்றம் சாட்டியுள்ளாராம். இது குறித்து அமலாக்கத் துறையிடம் புகார் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.




