எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
எதிர்நீச்சல் தொடரின் மூலம் டிரெண்டிங் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. மனதில் பட்டதை பொதுவெளியில் ஓப்பனாக பேசக்கூடியவர். அவர் கொடுத்த பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பல கருத்துகளை கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக பல கருத்துகளை கூறி எதிர்தரப்பினரை வாயடைத்தார். அந்த வீடியோவானது தொடர்ந்து சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோவை பார்த்த பழ.ஆறுமுகம் என்ற நபர் மாரிமுத்துவின் கருத்துகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என கூறி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு மாரிமுத்து 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.