விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “ஜெயிலர்' ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள், அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் திரையிட ஆவலாக உள்ளனர். அதனால், சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.