என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர், ஒரு இயக்குனராக 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர் தற்போது தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. 2024ல் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் திரையுலகில் 30 ஆண்டுகளைக் கடந்தது குறித்து 'கேம் சேஞ்சர்' படத்தின் நாயகன் ராம் சரண், “இந்தியத் திரையுலகில் நிஜமான கேம் சேஞ்சர். அற்புதமான 30 ஆண்டுகளைக் கடந்ததற்கு வாழ்த்துகள் சார். உங்களுக்காகக் இன்னும் முன்மாதிரியான பணிகளும், பாராட்டுக்களும் காத்திருக்கின்றன,” என்று வாழ்த்தியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “உங்கள் இனிமையான வாழ்த்துகளுக்கு நன்றி ராம். 'கேம் சேஞ்சர்', ஆகஸ்ட் மாதத்தில் நமது அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டம் என்பது படத்தின் முதல் சிங்கிள் வெளியீடா அல்லது டீசர் வெளியீடா, அல்லது அடுத்த கட்ட படப்பிடிப்பா என தெலுங்கு ரசிகர்கள் ஷங்கரின் அப்டேட்டிற்குக் கொஞ்சம் குழம்பிப் போய் உள்ளனர்.