எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர், ஒரு இயக்குனராக 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர் தற்போது தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. 2024ல் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் திரையுலகில் 30 ஆண்டுகளைக் கடந்தது குறித்து 'கேம் சேஞ்சர்' படத்தின் நாயகன் ராம் சரண், “இந்தியத் திரையுலகில் நிஜமான கேம் சேஞ்சர். அற்புதமான 30 ஆண்டுகளைக் கடந்ததற்கு வாழ்த்துகள் சார். உங்களுக்காகக் இன்னும் முன்மாதிரியான பணிகளும், பாராட்டுக்களும் காத்திருக்கின்றன,” என்று வாழ்த்தியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “உங்கள் இனிமையான வாழ்த்துகளுக்கு நன்றி ராம். 'கேம் சேஞ்சர்', ஆகஸ்ட் மாதத்தில் நமது அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டம் என்பது படத்தின் முதல் சிங்கிள் வெளியீடா அல்லது டீசர் வெளியீடா, அல்லது அடுத்த கட்ட படப்பிடிப்பா என தெலுங்கு ரசிகர்கள் ஷங்கரின் அப்டேட்டிற்குக் கொஞ்சம் குழம்பிப் போய் உள்ளனர்.