பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி, வழக்கம் போல ஒரு கதையைச் சொன்னார்.
“குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை, நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்,” என்றும், அவர் சொன்ன கதையில் “கழுகைப் பார்த்து காக்கா சீண்டிக்கிட்டே இருக்கும். கழுகப் பார்த்து, காக்காவும் உயரமா பறக்க நினைக்கும், ஆனா கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும், காக்காவாலா உயரமா பறக்கவும் முடியாது,” என்றார்.
ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தின் மீது இன்றைய முன்னணி நடிகர்கள் சிலருக்கு ஆசை வந்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் தாங்கள்தான் என்ற ரீதியில் அவர்களது பேச்சுக்களும், சுற்றியிருந்தவர்களின் பேச்சுக்களும் இருந்தது.
இந்நிலையில் இந்த வருடப் பொங்கலுக்கு விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படத்தின் நிகழ்வு ஒன்றில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலிருந்தே ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
'ஜெயிலர்' படத்தின் பாடல்களிலும் தன்னை எதிர்ப்பவர்களின் எண்ணங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடல் வரிகள் உள்ளதும் இந்த விவகாரத்தைத் தற்போது பெரிதாக்கி இருந்தது. நேற்று நடந்த 'ஜெயிலர்' விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'குரைக்கும் நாய், சீண்டும் காக்க' ஆகியவை இந்த சர்ச்சையை மேலும் பற்ற வைத்துள்ளது.
யாருடைய பெயரையும் குறிப்பிட்டு ரஜினி பேசவில்லை என்றாலும் அவர் விஜய் பற்றித்தான் அப்படிப் பேசினார் என சமூக வலைத்தளங்களில் தற்போது கடும் சண்டை நடந்து வருகிறது. கூடவே, ரஜினியை விமர்சித்து கமல்ஹாசன் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
'ஜெயிலர்' படம் இன்னும் பத்து நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இப்படிப்பட்ட பேச்சுக்கள், சண்டைகள், சர்ச்சைகள் என வெளிவந்து படத்திற்கு இலவச 'பப்ளிசிட்டி'யைக் கொடுத்துவிடும்.