காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளிவந்த திரைப்படம் வீரன். இந்த படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அவர் இயக்குனராக அறிமுகமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில் வீரன் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஏஆர்கே சரவன். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிற்பகுதியில் தொடங்கும் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.