லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் |

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளிவந்த திரைப்படம் வீரன். இந்த படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அவர் இயக்குனராக அறிமுகமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில் வீரன் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஏஆர்கே சரவன். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிற்பகுதியில் தொடங்கும் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.