20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளிவந்த திரைப்படம் வீரன். இந்த படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அவர் இயக்குனராக அறிமுகமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில் வீரன் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஏஆர்கே சரவன். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிற்பகுதியில் தொடங்கும் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.