கார் விபத்தில் சிக்கிய ஜி.பி.முத்து : வருத்தத்தில் வெளியிட்ட வீடியோ | 17 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் சுஹாசினி படம் | முனியாண்டியின் முனி பாய்ச்சல் | ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் |
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளிவந்த திரைப்படம் வீரன். இந்த படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அவர் இயக்குனராக அறிமுகமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில் வீரன் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஏஆர்கே சரவன். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிற்பகுதியில் தொடங்கும் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.