யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சுனில், மிர்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன் லால் நடித்துள்ளார். வருகிற ஆக., 10ம் தேதி படம் வெளியாக உள்ளது. சென்னையில் நேற்று(ஜூலை 28) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஜினி பேசியது தன்னை விமர்சிப்பவர்களுக்கும், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களுக்கு பதிலடியாகவும் அமைந்தது.
குடிப்பழக்கம் தான் எனக்கு சூனியம்
விழாவில் அவர் பேசியதாவது : ‛‛குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நமது வேலையை பார்த்துகிட்டு போய்க் கொண்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்டே சூனியம். குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே தயவு செய்து குடிப்பழக்கத்தை விடுங்கள்.
காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சின்ன மிருகங்கள் சீண்டிக்கிட்டே இருக்கும். உதாரணத்திற்கு கழுகை, காக்கா சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால் கழுகு அமைதியாக இறக்கையை கூட ஆட்டாமல் உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும். காக்காவால் அது முடியாது. உலகில் உன்னதமான மொழி மவுனம் மட்டுமே.
யாருக்கும் பயப்பட மாட்டேன்
சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்னை இப்போது அல்ல, 1977லேயே ஆரம்பித்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் ரஜினி பயந்துட்டாருனு சொன்னாங்க. கடவுளுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே பயப்படுவேன். மற்ற யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.