சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
மலையாள நடிகர் பிரித்விராஜ் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ் அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலும் தானும் இணைந்து நடித்த ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அதேசமயம் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிஸியான வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பிரித்விராஜிடம் தனக்காக ஒரு படம் இயக்க முடியுமா, கதை இருக்கிறதா என பிரபாஸ் கேட்டபோது அசத்தலான கதை ஒன்றை கூறி பிரபாஸை ஆச்சரியப்படுத்தினாராம் பிரித்விராஜ். அடுத்ததாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார் பிரித்விராஜ். அந்த வகையில் பிரித்விராஜ் மற்றும் பிரபாஸ் தங்களது அடுத்தடுத்த படங்களை முடித்துவிட்டு புதிய படத்திற்காக இணைய வாய்ப்பு உண்டு என்று தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.