‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
மலையாள நடிகர் பிரித்விராஜ் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ் அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலும் தானும் இணைந்து நடித்த ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அதேசமயம் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிஸியான வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பிரித்விராஜிடம் தனக்காக ஒரு படம் இயக்க முடியுமா, கதை இருக்கிறதா என பிரபாஸ் கேட்டபோது அசத்தலான கதை ஒன்றை கூறி பிரபாஸை ஆச்சரியப்படுத்தினாராம் பிரித்விராஜ். அடுத்ததாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார் பிரித்விராஜ். அந்த வகையில் பிரித்விராஜ் மற்றும் பிரபாஸ் தங்களது அடுத்தடுத்த படங்களை முடித்துவிட்டு புதிய படத்திற்காக இணைய வாய்ப்பு உண்டு என்று தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.