ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
ஒரு காலத்தில் காமெடி கிங்காக வலம் வந்த கவுண்டமணி, தற்போது புதியவர்களின் வருகையால் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அப்படியே நடித்தாலும் கதையின் நாயகனாகத்தான் நடிக்கிறார். பலர் நடிக்க அழைத்தும் மறுத்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு '49 ஓ' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்தார். இது ஒரு அரசியல் படம். அதன்பிறகு 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தில் நடித்தார். இது விவசாய அரசியல் படம்.
தற்போது அவர் சத்தமின்றி ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் 'ஒத்த ஓட்டு முத்தையா'. மண்டேலா படத்தில் யோகி பாபு ஒரு ஓட்டுக்காரராக நடித்தது போன்று இதில் கவுண்டமணி ஒரு ஓட்டு வாக்காளராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை சசி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ரவி ராஜன் தயாரிக்கிறார், சாய் ராஜகோபல் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார், ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.