போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சில வருடங்களுக்கு முன்பே கால்பதித்து பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று விட்டார் நடிகர் துல்கர் சல்மான். கடந்த வருடங்களில் கடைசியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி படங்களாக அமைந்தன. ஆனாலும் தற்பொழுது மலையாளத்தில் அவர் நடித்து வரும் கிங் ஆப் கோதா என்கிற ஒரு படம் மட்டுமே அவரது கைவசம் இருக்கிறது. அதில் மட்டுமே தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். அரிஜித் சிங் என்பவர் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், “கடந்த சில மாதங்களாக மறைத்து வைத்த ஒரு விஷயம் இது.. வரும் ஜூலை முதல் உங்கள் கவனத்திற்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.