தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சில வருடங்களுக்கு முன்பே கால்பதித்து பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று விட்டார் நடிகர் துல்கர் சல்மான். கடந்த வருடங்களில் கடைசியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி படங்களாக அமைந்தன. ஆனாலும் தற்பொழுது மலையாளத்தில் அவர் நடித்து வரும் கிங் ஆப் கோதா என்கிற ஒரு படம் மட்டுமே அவரது கைவசம் இருக்கிறது. அதில் மட்டுமே தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். அரிஜித் சிங் என்பவர் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், “கடந்த சில மாதங்களாக மறைத்து வைத்த ஒரு விஷயம் இது.. வரும் ஜூலை முதல் உங்கள் கவனத்திற்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.