இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி. 'டோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி சினிமா தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தமிழில் முழுநீள திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
'எல்.ஜி.எம்.' என்ற இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், இவானா நாயகியாகவும் நடித்துள்ளனர். நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே இசை அமைத்தும் உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு தோனி பேசியதாவது : சென்னை எனக்கு பிடித்த இடம். எனது கிரிக்கெட் அறிமுகம் இங்குதான் நடந்தது. இங்குதான் அதிக ஸ்கோர் செய்தேன். அளவில்லா அன்பை கொடுத்த ரசிகர்கள் சென்னை ரசிகர்கள், எனது வாழ்க்கையின் பல நல்ல விஷயங்கள் சென்னையில் தான் நடந்தது. அதனால்தான் சாக்ஷி சினிமா தயாரிக்க வேண்டும் என்று சொன்னபோது தமிழ் படம் தயாரிக்க சொன்னேன்.
படத்தின் விஷயங்களில் நான் தலையிட மாட்டேன். ஆனால் கதை கேட்பேன், பணிகள் முடிந்ததும் படம் பார்ப்பேன். எனது கருத்தை சொல்வேன் என்றேன். இந்த படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. நான் என் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவன். நதியாவின் நடிப்பில் அதை மீண்டும் உணர்ந்தேன். ஹரிஷ், இவானா, யோகிபாபு பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். இது தாய், மகன், மாமியார் உறவை பேசுகிற படம். எல்லோருக்கும் பொருந்துகிற கதை அம்சம் கொண்ட படம். சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு இந்த படத்தின் மூலம் சிறிய பகுதியை திருப்பி கொடுப்பதாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.