வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

1995ம் ஆண்டு 'சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் வனிதா விஜயகுமார், அதன்பிறகு ராஜ்கிரணுடன் நடித்த மாணிக்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணசித்தர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 'கடைசி தோட்டா' என்ற படத்தில் ஹீரோயினாக அதுவும் டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆர்.வி.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நவீன் இயக்குகிறார். அவருடன் ராதாரவி, ஸ்ரீகுமார் வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மர்டர் மிஸ்ட்ரி ஜார்னரில் படம் தயாராகி வருகிறது. மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.




