அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி |

'நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர்,' படங்களின் இயக்குனரான ராஜமவுலி தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் முடித்த பின் அப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பணிகளில் பிஸியாக இருந்தார். ஆஸ்கர் விருது வென்ற பின் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள ராஜமவுலி தனது தமிழக சுற்றுப் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
“தமிழகத்தின் மத்தியப் பகுதியில் சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. கோயில்களுக்கு செல்ல விரும்பிய என் மகளுக்காக அதில் இறங்கினோம். ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்கு ஜுன் கடைசி வாரத்தில் சென்றோம். இருந்த சில நாட்களில் பனிப்பாறையின் நுனியை மட்டுமே தொட முடிந்தது. நேர்த்தியான கட்டிடக் கலை, அற்புதமான பொறியியல், பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில ஊர்களில் அவர் சாப்பிட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டு, “ஒரு வாரத்தில் 2, 3 கிலோ எடை கூடிவிட்டேன். வெளிநாட்டுப் பயணம், சாப்பாடு ஆகியவற்றில் மூன்று மாதங்கள் போன பிறகு நமது தாய் மண்ணில் சுற்றுப் பயணம் செய்தது புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது,” என்றும் தெரிவித்துள்ளார்.




