அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் தனுஷ் ‛கேப்டன் மில்லர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்தனர். சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்ட அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷின் அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஒரு பேட்டியில் தனுஷ் 50வது படத்தில் ஒரு நல்ல ரோல் உள்ளது. அதில் நான் தான் நடிப்பேன் என்று தனுஷிடம் கேட்டுள்ளதாக செல்வராகவன் கூறியிருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.