யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் |

நடிகர் நாக சைதன்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த தேங்யூ, கஸ்டடி போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. அடுத்து கார்த்திகேயா பட இயக்குனர் சேன்டோ மோன்டீடி இயக்கத்தில் நாக சைதன்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மையான மீனவரின் காதல் கதையை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த கதையில் இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ‛தண்டல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.