பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் | ஆஸ்கர் விருது பெற்ற இந்திய மாணவர்கள் | எம்.எஸ்.சுப்புலட்சுமி தோற்றத்தில் அசத்திய வித்யா பாலன் | எம்.ஜி.ஆருக்கு எழுதிய கதையில் சிவாஜி | பிளாஷ்பேக்: முதல் இரண்டாம் பாக படம் | மணிமேகலை விஷயத்தில் குரேஷி அந்தர் பல்டி! | அரசியல் கேள்வி என்னிடம் கேட்காதீங்க : ரஜினி டென்ஷன் | ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு |
நடிகர் நாக சைதன்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த தேங்யூ, கஸ்டடி போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. அடுத்து கார்த்திகேயா பட இயக்குனர் சேன்டோ மோன்டீடி இயக்கத்தில் நாக சைதன்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மையான மீனவரின் காதல் கதையை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த கதையில் இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ‛தண்டல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.