இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் யோகிபாபுவின் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. மாவீரன், ஜெயிலர், அயலான் என அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த நிலையில் முதன்முதலாக கன்னட இசையமைப்பாளர் சுராக் என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. பிரபல கன்னட இசையமைப்பாளரும் இயக்குனருமான சாது கோகிலாவின் மகன் தான் இந்த சுராக். ஆனாலும் இந்த படம் தமிழில் தான் உருவாகி வருகிறது. அதன் பின்னர் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 10 நாட்கள் நடைபெற்று உள்ளது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பில் யோகிபாபு கலந்து கொண்டு நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.