Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துணிவு தந்த துயரம்... : அதிகாலை காட்சிகளுக்கு இனி அனுமதி கிடையாதா ?

27 ஜூன், 2023 - 10:25 IST
எழுத்தின் அளவு:
No-more-permission-for-early-morning-shows?

முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது கடந்த சில பல வருடங்களாகவே இருந்து வருகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அதிகாலை 4 மணி காட்சி, 5 மணி காட்சி என்று சீக்கிரமாக ஆரம்பமாகின. பின்னர், அதுவே நடுஇரவு 1 மணி காட்சி என்றும் இன்னும் சீக்கிரமாக நடந்தேறியது. கடந்த வருடம் வரை இப்படி நடைபெற்று வந்தது. அந்த சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் 500, 1000, 2000 வரை விற்கப்பட்டதும் சர்ச்சையை எழுப்பியது.

ஆனால், இந்த வருடம் முதல் அதில் அதிரடி மாற்றம் நடந்தது. பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' படங்கள் ஒரே நாளில் வெளியாகியது. அதில் 'துணிவு' படத்திற்கு மட்டும் நள்ளிரவு 1 மணி காட்சியும், 'வாரிசு' படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியும் மட்டுமே சிறப்புக் காட்சிகளாக நடைபெற்றது. அதில் 'துணிவு' படத்தின் வெளியீட்டை சென்னை தியேட்டரில் கொண்டாடிய அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து விழுந்து இறந்து போனார். அந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால் இனி அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தது.

கடந்த ஆறு மாதங்களாக சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் நடைபெறவில்லை. 8 மணிக்குப் பிறகே சிறப்புக் காட்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' படம் நாளை மறுதினம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குதான் நடைபெற உள்ளது. எந்தத் தியேட்டரிலும் அதிகாலை 4 மணி அல்லது 5 மணி காட்சி நடைபெறவில்லை.

அமைச்சரின் படத்திற்கே அதிகாலை காட்சிகளை நடத்தாத நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு முன்னணி நடிகரின் படங்கள் வெளிவந்தாலும் இனி அதிகாலை காட்சிகள் நடைபெற வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 'துணிவு' படத்திற்கான அதிகாலை காட்சியில் நடந்த இளைஞரின் அகால மரணம்தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். அதன் பிறகு அனுமதியில்லாமல் அதிகாலை காட்சிகளை நடத்திய தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டும் அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த விவகாரம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

இந்த வருடம் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்', விஜய் நடிக்கும் 'லியோ' உள்ளிட்ட பெரிய படங்கள் வர உள்ளன. அந்தப் படங்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கான அனுமதி நிச்சயம் வழங்கப்படாது என்றே சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சங்கங்களின் சந்திப்புகள் : தமிழ் சினிமாவில் மாற்றங்கள் வருமா?சங்கங்களின் சந்திப்புகள் : தமிழ் ... பட்டம் பெற்ற மாதவியின் மகள் : உலகின் மிகப்பெரிய 2 பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு பட்டம் பெற்ற மாதவியின் மகள் : உலகின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
28 ஜூன், 2023 - 04:42 Report Abuse
Mani . V மக்கள் சந்தோஷமாக இருப்பதை விரும்பாதவர்களின் வேலை இது. நாள் முழுவதும் சோமபானம் அருந்தி, நடிகர்களின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, வீட்டில் உள்ளவர்களை பட்டினி போட்டு, 2000 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் எடுத்து ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதனால் இடைவெளியே இல்லாமல் காட்சிகள் திரையிடப்பட வேண்டும். அப்பொழுதான் நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போவதற்கு ஏதுவாக இருக்கும்.
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
27 ஜூன், 2023 - 23:04 Report Abuse
Siva அமைச்சர் ஆனாலும் என்ன அஜீத் குமார் படமா... அதிகாலை வந்து பார்க்க... ரொம்ப பில்டப்...
Rate this:
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27 ஜூன், 2023 - 19:37 Report Abuse
Ramesh Sargam திரை அரங்குகளில் தினம் மூன்று காட்சிகள்தான் திரையிடவேண்டும் என்று ஒரு சட்டம் வரவேண்டும். விடிகாலையிலிருந்து, நள்ளிரவு வரை திரை அரங்குகளை திறந்துவைத்து, திரை அரங்கு முதலைகள், சாரி, முதலாளிகள் மற்றும் திரைப்படத்துறையினர், நடிகர், நடிகைகள் தின்று கொழிக்கிறார்கள். புத்திகெட்ட மக்கள் தங்கள் பொன்னான நேரம், பணம் இவற்றை திரைப்படம் பார்த்தே சீரழிகிறார்கள்.
Rate this:
27 ஜூன், 2023 - 16:06 Report Abuse
ஆரூர் ரங் 1969 இல் கட்சியிலிருந்த பலரின் எதிர்ப்பையும் மீறி கருணாநிதியை முதல்வராக்கினார் எம்ஜிஆர். பிறகு அதே எம்ஜிஆர் சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை தனக்குக் கேட்டபோது கருணாநிதி //நடிப்பை விட்டு விட்டு வாருங்கள். அமைச்சராக இருப்பவர் எந்த தொழிலும் செய்யக்கூடாது// என்று கூறி விரட்டி விட்டார் கருணாநிதி. இப்போது அமைச்சராக இருக்கும் அவரது பேரனே சினிமா எடுத்து நடித்து சம்பாதிக்கிறார்
Rate this:
27 ஜூன், 2023 - 16:06 Report Abuse
ஆரூர் ரங் 1969 இல் கட்சியிலிருந்த பலரின் எதிர்ப்பையும் மீறி கருணாநிதியை முதல்வராக்கினார் எம்ஜிஆர். பிறகு அதே எம்ஜிஆர் சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை தனக்குக் கேட்டபோது கருணாநிதி //. கட்சியில் ஒரு ஆட்சேபணையுமில்லை என்றார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in