குரங்கு பொம்மை - மகாராஜா கிளைமாக்ஸ் ; ஒரு ஆச்சரிய ஒப்பீடு | கமல் பயோபிக்: ஸ்ருதிஹாசன் சொன்ன "நச்" பதில் | கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி! | கருடன் பட வில்லன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | உலக தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் விளையாடி மகிழும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!! | உயிர்த்தோழியை குப்பைத்தொட்டி ஆக்கிய ஜனனி! | கருடன் - 50 கோடியை நெருங்கும் வசூல்…ஆனாலும்… | 'கல்கி 2898 எடி' விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம் | அல்லு அர்ஜுன் - அட்லி படம் 'டிராப்'? | விஜய் பிறந்த நாளில் ‛தி கோட்' பர்த்டே ஸ்பெஷல்! வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு |
சென்னை: மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், அமைச்சர் உதயநிதி, 'ரெட் ஜெயின்ட்' நிறுவனம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, 'ஓ.எஸ்.டி., பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனு: உதயநிதியை கதாநாயகனாக வைத்து, ஏஞ்சல் என்ற படத்துக்கான தயாரிப்பு பணிகள், 2018 ஜூலையில் துவங்கின. 70 நாட்கள் 'கால்ஷீட்' தருவதாக, உதயநிதி ஒப்புக் கொண்டார். தற்போது, 80 சதவீத படப்படிப்பு முடிந்துள்ளது. 13 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. மீதி பணிகளை முடிக்க, எட்டு நாட்கள் போதும். அதற்கான கால்ஷீட் உதயநிதி தரவில்லை. அமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட்ட பின், மாமன்னன் படம் தான், தன் கடைசி படம் என கூறியுள்ளார். 'மாமன்னன்' படமும் வெளியாக போகிறது. ஏஞ்சல் படத்துக்கான பணிகளை முடித்து தர, உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடு தரவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி குமரேஷ்பாபு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜரானார். ரெட் ஜெயின்ட் மூவிஸ் தரப்பில், பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வரும் 28க்குள் பதில் அளிக்க, உதயநிதி மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.