விஜய்க்கு நான் யார்? : ரகசியம் உடைத்த வைபவ் | விஜய் தேவரகொண்டாவுக்காக டப்பிங் பேசிய தம்பி | லூசிபர் 2 ரிலீஸ் எப்போது? ; மோகன்லால் தகவல் | எம்ஜிஆர் - சிவாஜிக்கே செட்டாகாத போது எனக்கு மட்டும் எப்படி? ராமராஜன் கேள்வி | 'இந்தியன் 2' இசை விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்? | தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடி | அதிகாலை காட்சிகளை ரத்து செய்யும் தெலுங்கானா தியேட்டர்கள் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழு, இளையராஜாவை சந்திக்காத காரணம் இதுதானா? | சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா: நாளை தொடங்குகிறது | 15 லட்சம் பணமும் போச்சு, கேன்ஸ் பட விழா வாய்ப்பும் போச்சு: கிரண் வேதனை |
மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ, மரியான் போன்ற சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி. சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட படக்காட்சிகள் முடிவடைந்தன. இப்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கலான் படம் குறித்து பகிர்ந்துள்ளார். தங்கலான் படத்தில் நடித்தது பணம், புகழை தாண்டி பணியை செய்த திருப்தியை கொடுத்துள்ளது. எனக்கு திருப்தியான படம் உங்களைப் போலவே நானும் இந்த படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளேன்'' என்று பதிவிட்டுள்ளார்.