பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தெலுங்கில் மகேஷ்பாபுவின் புதிய படமான குண்டூர் காரம் படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இடையில் மகேஷ்பாபுவின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சில துக்கமான நிகழ்வுகளால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியாமல் அடிக்கடி தள்ளிப்போனது. இதனால் ஏற்பட்ட கால்சீட் குளறுபடி காரணமாக தற்போது இந்த படத்தில் பூஜா ஹெக்டே பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்ற செய்தி கடந்த இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அவர் மட்டுமல்ல இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் கூட சில காரணங்களால் விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக நடிகை சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் நுழைந்த சம்யுக்தா, அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடித்த சார் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான விருபாக்சா ஆகிய படங்கள் மூலம் கவனிக்கத்தக்க நடிகையாக மாறியுள்ளார். இந்த நிலையில் தான் மகேஷ்பாபு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது