முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க வராமல் சிக்கலை ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்பதும் அந்தத் தீர்மானத்தில் ஒன்று. யார் யார் அந்த நடிகர்கள் என தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் வெளியிடப்படவில்லை.
இருந்தாலும் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, அதர்வா, யோகிபாபு, ஆகியோர்தான் அவர்கள் என அதிகாரப்பூர்வமில்லாத ஒரு தகவல் பரவியது. ஆனால், அந்தப் பட்டியலில் சிம்பு, விஷால் ஆகியோரது பெயரை வேண்டுமென்றே சிலர் பரப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். சிம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்த்த பிறகுதான் அவர் நடித்த 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்கள் வெளிவந்தன என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
பரபரப்புக்காகவும், தங்களைப் பற்றிய தவறான தகவல் வேண்டுமென்றே பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் யு டியுப் சேனல்களில் சிலர் இப்படி செய்கிறார்கள் என சம்பந்தப்பட்ட நடிகர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்களாம். தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரையில் அந்த நடிகர்கள் யார், யார் என்று வெளியிடாமல் இந்த விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது.