'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் அரசியலுக்கு வரப் போகிறாரா இல்லையா என்பது குறித்து கடந்த வாரத்திலிருந்து அரசியல் வட்டாரங்களிலும், மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும், ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.
நாளை ஜுன் 22ம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். அதில் 'நாளைய முதலமைச்சர்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அவர்களாகவே அப்படியான போஸ்டர்களை ஒட்டுகிறார்களா அல்லது விஜய் தரப்பிலிருந்து அப்படி போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்கிறார்களா என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் விஜய் பேசிய பிறகு அவரது அரசியல் நுழைவு பற்றி கடும் விவாதங்கள் எழுந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இப்படி ஒட்டும் போஸ்டர்கள் குறித்து ஆளும் கட்சி தரப்பிலிருந்து என்ன விமர்சனம் வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.