63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு | நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து |

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் அரசியலுக்கு வரப் போகிறாரா இல்லையா என்பது குறித்து கடந்த வாரத்திலிருந்து அரசியல் வட்டாரங்களிலும், மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும், ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.
நாளை ஜுன் 22ம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். அதில் 'நாளைய முதலமைச்சர்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அவர்களாகவே அப்படியான போஸ்டர்களை ஒட்டுகிறார்களா அல்லது விஜய் தரப்பிலிருந்து அப்படி போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்கிறார்களா என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் விஜய் பேசிய பிறகு அவரது அரசியல் நுழைவு பற்றி கடும் விவாதங்கள் எழுந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இப்படி ஒட்டும் போஸ்டர்கள் குறித்து ஆளும் கட்சி தரப்பிலிருந்து என்ன விமர்சனம் வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.




