'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

சமீபத்தில் கடந்து சென்ற தந்தையர் தினத்தை கொண்டாடும் விதமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது தந்தையுடனான அனுபவங்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமாருடன் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவரது தந்தையின் மடியில் சிறு குழந்தையாக கீர்த்தி சுரேஷ் இருப்பது போலவும் பார்ப்பதற்கு அந்த நிகழ்வு அவருக்கு பெயர் சூட்டு விழா போலவும் தெரிந்தது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இதேபோன்ற ஒரு நிகழ்வை இப்போது மீண்டும் மறு உருவாக்கம் செய்ய விரும்பியதாக, அதாவது தனது தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால் இப்போது அது சாத்தியமில்லை என தனது தந்தை மறுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.