சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
சமீபத்தில் கடந்து சென்ற தந்தையர் தினத்தை கொண்டாடும் விதமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது தந்தையுடனான அனுபவங்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமாருடன் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவரது தந்தையின் மடியில் சிறு குழந்தையாக கீர்த்தி சுரேஷ் இருப்பது போலவும் பார்ப்பதற்கு அந்த நிகழ்வு அவருக்கு பெயர் சூட்டு விழா போலவும் தெரிந்தது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இதேபோன்ற ஒரு நிகழ்வை இப்போது மீண்டும் மறு உருவாக்கம் செய்ய விரும்பியதாக, அதாவது தனது தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால் இப்போது அது சாத்தியமில்லை என தனது தந்தை மறுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.