சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
சமீபத்தில் கடந்து சென்ற தந்தையர் தினத்தை கொண்டாடும் விதமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது தந்தையுடனான அனுபவங்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமாருடன் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவரது தந்தையின் மடியில் சிறு குழந்தையாக கீர்த்தி சுரேஷ் இருப்பது போலவும் பார்ப்பதற்கு அந்த நிகழ்வு அவருக்கு பெயர் சூட்டு விழா போலவும் தெரிந்தது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இதேபோன்ற ஒரு நிகழ்வை இப்போது மீண்டும் மறு உருவாக்கம் செய்ய விரும்பியதாக, அதாவது தனது தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால் இப்போது அது சாத்தியமில்லை என தனது தந்தை மறுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.