'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், லால் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‛மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஜூன் 29ல் படம் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன. உதயநிதி அமைச்சராகிவிட்டதால் இந்தப்படம் தான் தனது கடைசி படம் என அவர் கூறி உள்ளார். அதேசமயம் 3 ஆண்டுகளுக்கு பின் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்திற்கு தடை கோரி மனு சென்னை ஐகோர்ட்டில் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கேஎஸ் அதியமான் இயக்கத்தில் உதயநிதி, பாயல் ராஜ்புட், ஆனந்தி, யோகி பாபு நடிக்க ‛ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டு 80 சதவீதம் படப்பிடப்பு முடிந்துள்ளது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதுதான் தனது கடைசி படம் என்றும் கூறியுள்ளார். இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை ரூ.13 கோடி செலவாகி உள்ளது. இந்த படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எனக்கு இழப்பு ஏற்படும். ஆகவே மீதமுள்ள படப்பிடிப்பை உதயநிதி முடித்து தர வேண்டும். ரூ.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் கூறி உள்ளார்.
இதனால் மாமன்னன் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.