திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ம் ஆண்டில் கவுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு இப்போது ஒரு மகனும் உள்ளார்.
ஆனாலும், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் காஜல். அதனால் அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாததால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், இதுபற்றி அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது; “சினிமாவில் இருந்து ஒரு போதும் நான் விலக மாட்டேன். ரசிகர்கள் மீது எனக்கு பெரும் அன்பு இருக்கிறது; அதை எளிதில் விட்டு கொடுக்க மாட்டேன் . என் தொழில், குடும்ப வாழ்க்கை இரண்டும் தனித்தனியாகவே இருக்கிறது .அது தொடரும்” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.