லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவர் பின்னர் அன்பே ஆருயிரே படத்தில் அவரே ஹீரோவும் ஆகிவிட்டார். சமீபகாலமாக ஹீரோ, வில்லன் என வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மாநாடு படத்தின் ஹிட்டுக்கு பிறகு ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அதோடு இந்தியன் 2 படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் தான் நடித்துள்ள பொம்மை படம் நாளை 16-ம் தேதி திரைக்கும் நிலையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் எஸ். ஜே. சூர்யா. அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே சிம்பு நடிப்பில் ஏசி என்ற ஒரு படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அந்த படம் அப்போது கைவிடப்பட்டது . அதில் சிம்பு கேங்ஸ்டராகவும், பசு வளர்ப்பவராகவும் இரண்டு வேடங்களில் நடிக்க இருந்தார். அது ஒரு ஜாலியான படம். அந்த கதை குறித்து மாநாடு படத்தில் நடித்தபோது மீண்டும் சிம்புவுடன் விவாதித்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும் போது அப்படத்தை சிம்புவை வைத்து இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.