நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகனும் இளம் நடிகருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டினரின் சம்மதத்துடன் சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி மற்றும் அல்லு அரவிந்த் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அதேசமயம் நாக பாபுவின் மகள் நிஹாரிகா கடந்த வருடம் திருமணம் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனது கணவர் சைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு நிஹாரிகாவின் கணவர் கலந்து கொள்ளவில்லை. நிஹாரிக்காவின் கணவர் சைதன்யா இந்த நிகழ்வில் வேண்டுமென்றே கலந்து கொள்ளவில்லையா அல்லது அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா? இல்லை இந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.. அதேசமயம் நிஹாரிகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.