புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் விஜய்சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை நிஹாரிகா. ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவுக்கும், சைதன்யா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரமாண்ட முறையில் திருமணம் நடந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார், நிஹாரிகா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் திருமணம் பெற்றோர் நிச்சயம் செய்தது. விவாகரத்து பெற்றபோது என்னை நிறைய பேர் பல விதமாக பேசினார்கள். நிறைய அழுதேன். வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், எல்லாம் நினைத்த மாதிரி நடக்காது. இதுவும் அப்படித்தான். விவாகரத்து பெற்றதும் எனது கேரக்டரை தவறாக பேசினார்கள். என்னையும், குடும்பத்தினரையும் கேவலப்படுத்தினார்கள். அப்போது தாங்க முடியாமல் அழுதேன்.
ஆனால் என் குடும்பம் என் மீது தவறு சொல்லவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொண்டேன். யாரையும் நம்பக்கூடாது என தெரிந்து விட்டது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்கிறார் நிஹாரிகா.