பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

தமிழில் விஜய்சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை நிஹாரிகா. ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவுக்கும், சைதன்யா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரமாண்ட முறையில் திருமணம் நடந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார், நிஹாரிகா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் திருமணம் பெற்றோர் நிச்சயம் செய்தது. விவாகரத்து பெற்றபோது என்னை நிறைய பேர் பல விதமாக பேசினார்கள். நிறைய அழுதேன். வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், எல்லாம் நினைத்த மாதிரி நடக்காது. இதுவும் அப்படித்தான். விவாகரத்து பெற்றதும் எனது கேரக்டரை தவறாக பேசினார்கள். என்னையும், குடும்பத்தினரையும் கேவலப்படுத்தினார்கள். அப்போது தாங்க முடியாமல் அழுதேன்.
ஆனால் என் குடும்பம் என் மீது தவறு சொல்லவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொண்டேன். யாரையும் நம்பக்கூடாது என தெரிந்து விட்டது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்கிறார் நிஹாரிகா.