ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழில் விஜய்சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை நிஹாரிகா. ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவுக்கும், சைதன்யா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரமாண்ட முறையில் திருமணம் நடந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார், நிஹாரிகா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் திருமணம் பெற்றோர் நிச்சயம் செய்தது. விவாகரத்து பெற்றபோது என்னை நிறைய பேர் பல விதமாக பேசினார்கள். நிறைய அழுதேன். வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், எல்லாம் நினைத்த மாதிரி நடக்காது. இதுவும் அப்படித்தான். விவாகரத்து பெற்றதும் எனது கேரக்டரை தவறாக பேசினார்கள். என்னையும், குடும்பத்தினரையும் கேவலப்படுத்தினார்கள். அப்போது தாங்க முடியாமல் அழுதேன்.
ஆனால் என் குடும்பம் என் மீது தவறு சொல்லவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொண்டேன். யாரையும் நம்பக்கூடாது என தெரிந்து விட்டது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்கிறார் நிஹாரிகா.