22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் விஜய் சேதுபதி நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி படமாகியது. தற்போது இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி மலேசியா சென்றுள்ளார்.
மேலும் ஹிந்தியில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக கத்ரினா கைப் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் இந்த படம் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் கபாலி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர்கள் ரகசியமாக வைத்துள்ளார்களாம்.