தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் இலியானா. இன்னும் திருமணம் செய்யாமல் உள்ள இலியானா தனது கர்ப்பத்துக்கு காரணமானவர் யார் என்பதை அறிவிக்கவில்லை. இதன் காரணமாக இலியானாவின் கர்ப்பம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது தனது காதலருடன் தான் இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இலியானா, தனக்கு பிறக்கப் போகும் குழந்தை மற்றும் காதலர் குறித்தும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதேசமயம் அவரின் போட்டோ தெளிவாக இல்லை. அந்த நபர் யார் என்பதையும் அவர் குறிப்பிடாமல் அவரை பற்றி உருகி உருகி நெகிழ்ந்துள்ளார் இலியானா.
தனது காதலர் குறித்து கூறுகையில், இந்த மனிதர் எனக்கு மிகவும் துணையாக நின்றார். நான் மனசு உடைந்து நின்ற போதெல்லாம் என்னை தாங்கி நின்றார் . என்னுடைய கண்ணீரைத் துடைத்தார். தேவையான பொழுது கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார். இனிமேல் எதுவுமே கடினமாக இருக்காது என்று கூறினார். அவர் சொன்ன வார்த்தைகள் ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் அமைந்தன என்று பதிவிட்டுள்ளார் நடிகை இலியானா.
அதில், கர்ப்பமாக இருப்பதே ஒரு அழகான ஆசீர்வாதம். நான் இத்தனை பாக்கியசாலி என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. எனக்குள் ஒரு உயிர் வளர்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உன்னை விரைவில் சந்திப்பேன் . அடுத்து வரப் போகும் சில நாட்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கப்போகிறது. கண்ணீர் மற்றும் குற்ற உணர்வு என நடப்பவை நம்பிக்கை அற்றவையாக உள்ளது. நான் வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் எந்த மாதிரியான அம்மாவாக இருப்பேன் எனக்கு அது உண்மையாகவே தெரியவில்லை. நான் இந்த சிறிய உயிரை மிகவும் நேசிக்கிறேன். இதுவே எனக்கு போதுமானது என்று பிறக்கப் போகும் குழந்தை குறித்து பதிவிட்டுள்ளார் இலியானா.