அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'தங்கலான்'. தொடர்ந்து நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக நடைபெறவில்லை. படத்திற்காக பயிற்சி பெற்ற போது விக்ரமிற்கு விலா எலும்பில் காயமேற்பட்டு அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். அவரது காயம் தற்போது சீராகிவிட்டதால் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்க படக்குழு தயாராகி வருகிறதாம்.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரங்கில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. ஒரு பீரியட் படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியின் முதல் படம், தனது கதாபாத்திரத்திற்காக எதையும் செய்யும் விக்ரம் என எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது படம். இந்த வருடம் வெளியாக உள்ள படங்களில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்திலும் தெரிவிக்கிறார்கள்.