அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென்று லைகா நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டதால் திட்டமிட்டபடி விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை தாமதமாகும் என்கிற தகவல்களும் வெளியாகின. ஆனபோதும் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி இந்த வாரத்தில் தொடங்குகிறது.
இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளுக்காக அஜித்தும், மகிழ்திருமேனியும் லண்டனுக்கு சென்று தற்போது சென்னை திரும்பி விட்டார்கள். அங்கு அஜித்தின் புதிய கெட்டப்புக்கான போட்டோ சூட் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்க உள்ளது . இதற்காக அங்கு ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்பில் வில்லன்களுடன் அஜித் மோதும் அதிரடியான சண்டை காட்சி படமாக உள்ளது.
அஜித்தின் கடந்த சில படங்களில் ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறாமல் ஆக்சனுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் ஆக்சனுக்கு இணையாக ரொமான்டிக் காட்சிகளும் இடம் பெறுகிறதாம். தற்போது தொடங்கப்படும் படப்பிடிப்பை இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார் மகிழ்திருமேனி.