பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நன்கு அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. தற்போது படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது தம்பி அபிராம் முதன்முதலாக அஹிம்சா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. அதேபோல தெலுங்கு திரையுலகின் இன்னொரு இளம் நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவரின் தம்பி பெல்லம்கொண்டா கணேஷ் நடித்துள்ள நேனு ஸ்டுடென்ட் சார் என்கிற படமும் வெளியாக இருக்கிறது.
இரண்டு நடிகர்களின் சகோதரர்கள் மோதிக்கொள்ளும் போட்டியாக மட்டும் இது இருந்திருந்தால் இதுபற்றி யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால் மூன்றாவதாக பரேசன் என்கிற ஒரு படமும் இதே தேதியில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் ரூபக் ரெனால்ட்சன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப்படத்தை நடிகர் ராணா தான் தனது நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார்.
தனது தம்பி நடித்துள்ள அறிமுகப்படம் வெளியாகும் அதேநாளில் இப்படி வேறொரு படத்தை தன் சொந்த நிறுவனம் மூலமாக ராணா ரிலீஸ் செய்வது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு வாரம் கழித்தாவது ராணா அந்த படத்தை ரிலீஸ் செய்யலாமே, எதற்காக போட்டிக்கு ரிலீஸ் செய்வது போல செய்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.