போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப்பிறகு பல படங்களில் காமெடியனாகவும், குத்துப்பாட்டுக்கு ஆடுபவராகவும் வளர்ந்து நிற்கிறார் சீனிவாசன். என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த காமெடியனாக அவரை எந்த இயக்குனர்களும் அங்கீகரிக்கவில்லை. மற்ற காமெடியன்களுடன் வரும் சப்போட்டிங் காமெடியனாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கிடையில் அவரைப்பற்றி ஏகப்பட்ட பில்டப் செய்திகள் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. மேலும், சீனிவாசன் சார்பாகவும், ஐ படத்துக்குப்பிறகு ஒருநாளைக்கு ஐந்து லட்சமாக சம்பளத்தை உயர்த்தப்போவதாக சமீபத்தில் அதிர்ச்சி அறிக்கையொன்று வாசித்தார்கள்.
ஆனால் இந்த பில்டப் எல்லாம் திரைக்கு முன்னால்தான். ஆனால் திரைக்குப்பின்னால் பட வாய்ப்புக்கேட்டு டைரக்டர்களை துரத்திக்கொண்டு திரிகிறார் சீனிவாசன். சமீபத்தில்கூட ஒரு இயக்குனர் அவரை அணுகி கதை சொன்னபோது, நான் ரஜினி ரேஞ்சுக்கு பெரிய நடிகன் என்று சொடக் போட்டு பேசினாராம் சீனிவாசன். இதனால் கடுப்பான அந்த இயக்குனர், சரி அப்புறம் மற்றதை பேசுவோம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டாராம். ஆனால் அதையடுத்து அவரிடமிருந்து எந்தவித பதிலும் வராததால், அப்புறம் வர்றேன்னு சொன்னீங்களே? எப்ப வருவீங்க? என்று பவரின் மேனேஜர் ஒருவர் பின்னர் அந்த இயக்குனருக்கு போன் போட்டு நச்சரித்தாராம். அதற்கு, நான் ஒரு சின்ன காமெடி நடிகர் என்று நினைத்துதான் சீனிவாசனை புக் பண்ண வந்தேன். ஆனால் அவர் ரஜினி ரேஞ்சுக்கு பெரிய நடிகர் என்று சொல்கிறாரே. அவரையெல்லாம் புக் பண்ற அளவுக்கு என் படத்தின் பட்ஜெட் தாங்காது என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டாராம்.
இதையடுத்து, ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்று அடக்கிவாசிக்க முடிவெடுத்திருக்கிறாராம் சீனிவாசன்.