ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

உலக அழகி பட்டம் பெற்று பின்னர் தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த 20 வருடங்களில் தற்போதும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் முன்னணி இடத்தில் தான் இருக்கிறார். அவ்வப்போது பாலிவுட் சினிமா குறித்தும், சில நேரங்களில் தான் கடந்து வந்த பாதை குறித்தும் தனது பேட்டிகளில் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அப்படி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இரண்டு நாட்கள் நடித்த பின்னர் வேண்டாம் என்று உதறிவிட்டு வந்ததாக கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
இது குறித்து அவர் கூறும்போது, “இது நான் சினிமாவில் நுழைந்த புதிதில் பாலிவுட்டில் என்னை தேடி வந்த படம். இதில் எனக்கு உளவாளி கதாபாத்திரம் என்பதால் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியின்போது எதிர்தரப்பு இளைஞன் ஒருவனை கவர்ச்சியால் உணர்ச்சியை தூண்டி மயக்கும் விதமாக காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் நான் ஒரு ஆடையை களைய வேண்டும். ஆனால் என்னுடைய ஆடை வடிவமைப்பாளரிடம் அந்தப் படத்தின் இயக்குநர் என்னை உள்ளாடையில் பார்க்க வேண்டும்; இல்லையென்றால் ஏன் மக்கள் இந்தப் படத்தை வந்து பார்க்கப் போகிறார்கள்? என கேட்டார். மனிதத்தன்மையற்ற ஒரு தருணமாக இருந்தது. அன்றே அந்த படத்தில் இருந்து வெளியேறி கிளம்பி விட்டேன். இந்த தகவலை கேள்விப்பட்ட என் தந்தை இரண்டு நாட்கள் என்னால் அவர்களுக்கு என்ன நஷ்டமானதோ அந்த தொகையை திருப்பிக்கொடுத்து விடு என்று சொன்னதால் அந்தத் தொகையையும் திருப்பிக் கொடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.