இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இந்த படத்தை துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சரித்திர கால கதையில் தயாராகும் இப்படத்தில் போர் வீரராக நடிக்கும் சிம்பு அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது கதாபாத்திரத்திற்காக நீண்ட தலை முடியையும் வளர்த்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சிம்புவின் 48வது படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையான இவர் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.