நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவருடைய 'கென்னடி' என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த படத்தை திரையிட்ட பிறகு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப், "முதலில் இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய மனதில் இருந்தவர் நடிகர் விக்ரம். அதற்கு காரணம் அவருடைய உண்மையான பெயர் 'கென்னடி'. ஆனால், அவரை நான் தொடர்பு கொண்டபோது என் அழைப்புக்கு அவர் எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன் என்று தெரிவித்தார்.
அனுராக் காஷ்யப் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி நெட்டிசன்கள் விக்ரமை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இந்த விடியோவிற்கு நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
"அன்புக்குரிய அனுராக் காஷ்யப், ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நமது உரையாடலை கூறுகிறேன். இந்த படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு நான் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக நான் அறிந்த உடன் உங்களை தொடர்பு கொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன். மேலும், நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் என் மொபைல் நம்பரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் மாற்றிவிட்டேன் என்று அப்போதே உங்களிடம் கூறினேன். நீங்கள் இயக்கியுள்ள கென்னடி படத்தை பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால். அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்” என்று தனது விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.