நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

வருகிற 2064ம் ஆண்டு சென்னை, ஐதராபாத், பெங்களூரு மாதிரியான பெரு நகரங்கள் அழிந்து மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் அலையும் சூழ்நிலை வந்தால் அப்போது மக்கள் எந்த மாதிரியான மனநிலையுடன் இருப்பார்கள் என்பதை கதை களமாக கொண்டு உருவாகி உள்ள படம் கலியுகம். பிரமோத் சுந்தர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிஷோர், இனியன் சுப்பிரமணி, ஹரி, அஸ்மல், சந்தோஷ், மணி, ஆர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வின்சன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிரமோத் சுந்தர் கூறும்போது “ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பது உணவும் - தண்ணீரும்தான். இது இரண்டும் கிடைக்காத பட்சத்தில் மனிதனிடத்தில் மனித நேயம் என்பது இருக்குமா? என்கிற கற்பனை ஓட்டத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உணவுக்காகவும் - தண்ணீருக்காகவும் போராடும் போராட்டமே இந்த படம். விவசாய பாதுகாப்பு, தண்ணீர் சிக்னம் இல்லாவிட்டால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் சொல்லும்” என்கிறார்.