'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

பசங்க படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்டார். இதில் பிரீத்தி, கிஷோரை விட நான்கு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்த அவசர திருமணம் எதற்காக என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கிஷோர் - பிரீத்தி இருவரும் இதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளனர்.
பிரீத்தியின் தந்தைக்கு கடந்த 4 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மகளின் திருமணத்தை சீக்கிரம் பார்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றவே அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும், இல்லையேல் தனது 31வது வயதில் தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கிஷோர் விளக்கமளித்துள்ளார்.




