பெயரை சுருக்கும்படி நிர்ப்பந்தித்தார்கள் ; கவுதம் வாசுதேவ் மேனன் | லூசிபர் 3ம் பாகமும் இருக்கு ; தன்னை அறியாமல் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ் | முகராசி, ஆட்டோகிராப், 96 - ஞாயிறு திரைப்படங்கள் | நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி |
இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானது.
லண்டன் ஓட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிடும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரமானது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உண்மைதான். இதனால் தான் சமந்தா உடன் நாக சைதன்யா விவாகரத்து பெற்றார் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு சமீபத்தில் சோபிதா துலிபாலா அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, "என்னை பற்றி பரவி வரும் காதல் வதந்திகள் யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் எப்போதும் கண்டு கொள்வதும், அதற்காக வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லாதபோது அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதேபோல் எந்த தவறும் செய்யாதபோது நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.