கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானது.
லண்டன் ஓட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிடும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரமானது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உண்மைதான். இதனால் தான் சமந்தா உடன் நாக சைதன்யா விவாகரத்து பெற்றார் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு சமீபத்தில் சோபிதா துலிபாலா அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, "என்னை பற்றி பரவி வரும் காதல் வதந்திகள் யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் எப்போதும் கண்டு கொள்வதும், அதற்காக வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லாதபோது அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதேபோல் எந்த தவறும் செய்யாதபோது நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.