போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அனுஷ்கா-ப்ரியாமணி இருவருமே நல்ல திறமையான நடிகைகள் என்பதை சில படங்களில் நிரூபித்து விட்டார்கள். என்றாலும் அவர்களின் திறமைக்கேற்ற தீனி போடத்தான் இயக்குனர்கள் இல்லை. பெரும்பாலான இயக்குனர்கள் அவர்களின் கவர்ச்சியை குறிவைத்தே வாய்ப்புக்கொடுத்து வருகின்றனர். அப்படி நடிப்பதற்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதனால்தான் காசு விசயத்தில் கஞ்சத்தனம் செய்யும் கோடம்பாக்கத்தில் அடக்கிவாசிக்கும் மேற்படி நடிகைகள், ஆந்திராவில் தங்களுக்கு அள்ளிக்கொடுப்பதால், அவர்களது எதிர்பார்ப்பறிந்து கவர்ச்சியை மானாவாரியாக வாரி வழங்குகிறார்களாம்.
அந்த வகையில், தற்போது அனுஷ்கா நடிப்பில் ஆந்திராவில் வெளியான மிர்ச்சி படத்திலும், ப்ரியாமணி நடிப்பில் வெளியான டிக்கா படத்திலும் கிட்டத்தட்ட மேற்படி அம்மணிகள் கவர்ச்சியின் எல்லையையே தொட்டு விட்டார்களாம். துக்கடா டிரஸ் அணிந்து அவர்கள் நடித்ததால்,இளவட்ட ரசிகர்களின் கூட்டம் மேற்படி படங்களுக்கு அலைமோதியதாம். இதன்காரணமாக, ஆந்திரதேசத்து சமூக ஆர்வலர்கள் மேற்படி நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பொதுநலன் கருதி, அனுஷ்கா-ப்ரியாமணி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களாம். இதனால் அனுஷ்கா-ப்ரியாமணி இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.