போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ். இனிமையான குரலின் மூலம் பல லட்ச ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள ரக்ஷிதா தற்போது சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தவிரவும் உள்நாட்டு, வெளிநாட்டு மேடை கச்சேரிகளிலும் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கியுள்ளார். மலேசியா ஏர்போர்ட்டுக்கு ரக்ஷிதாவும் குழுவினரும் காரில் வந்து கொண்டிருந்த போது, கார் திடீரென சாலையோர டிவைடரில் பலமாக மோதியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா 'நடந்த விசயத்தை நினைத்தால் உடல் நடுங்குகிறது. உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். ஏர்பேக்குகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரக்ஷிதாவின் ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.