மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தொழிலதிபரான வருண் மணியன் என்பவரைக் காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் 2015ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை செல்லாமல் இருவரும் திடீரெனப் பிரிந்தார்கள். அதன்பின் வருண் மணியன், நடிகை பிந்து மாதவி இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் வெளிவந்தன. அதனால், இருவரும் காதலிக்கிறார்களா என்ற கிசுகிசுவும் வந்தது.
எப்போதோ நடந்த அந்த விஷயம் பற்றி ஐதராபாத்தில் நடந்த 'நியூசென்ஸ்' என்ற வெப்சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பிந்து மாதவியிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிந்து மாதவி, “அது உண்மைதான். ஆனால், இரண்டும் வெவ்வேறு காலத்தில் நடந்தது, ஒரே சமயத்தில் நடந்ததல்ல,” என்றார். நிகழ்ச்சி தொகுப்பாளர், “த்ரிஷா பிரிந்த பிறகு நீங்கள் 'டேட்டிங்' செய்தீர்களா என்றதற்கு 'ஆமாம்' என பதிலளித்தார் பிந்து மாதவி.
'நியூசென்ஸ்' என்ற இந்த தெலுங்கு வெப்சீரிஸ், 20 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின், மதனபள்ளியில் நடப்பதாக க்ரைம், அரசியல், பத்திரிகைத் துறை கலந்த தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. மே 12ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.




