பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றிகளை கொடுத்த பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாகப் சூர்யா நடித்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவரின் அடுத்த பட அறிவிப்பில் தாமதம் நிலவுகிறது. பாண்டிராஜ் அறிமுகப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனே அவர் கதையில் நடிப்பதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அவரை தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி, விஷால் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றும் படம் கைகூடவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் பாண்டிராஜை அழைத்து ஜெயம் ரவி என்னை வைத்து படம் இயக்குங்கள் நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அவரது ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கின்றார் என்று கூறப்படுகிறது.




