அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றிகளை கொடுத்த பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாகப் சூர்யா நடித்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவரின் அடுத்த பட அறிவிப்பில் தாமதம் நிலவுகிறது. பாண்டிராஜ் அறிமுகப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனே அவர் கதையில் நடிப்பதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அவரை தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி, விஷால் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றும் படம் கைகூடவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் பாண்டிராஜை அழைத்து ஜெயம் ரவி என்னை வைத்து படம் இயக்குங்கள் நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அவரது ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கின்றார் என்று கூறப்படுகிறது.