இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றிகளை கொடுத்த பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாகப் சூர்யா நடித்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவரின் அடுத்த பட அறிவிப்பில் தாமதம் நிலவுகிறது. பாண்டிராஜ் அறிமுகப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயனே அவர் கதையில் நடிப்பதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அவரை தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி, விஷால் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றும் படம் கைகூடவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் பாண்டிராஜை அழைத்து ஜெயம் ரவி என்னை வைத்து படம் இயக்குங்கள் நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அவரது ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கின்றார் என்று கூறப்படுகிறது.